tamilnadu

img

உடுமலை நகராட்சியில் தூய்மைப் பணிக்கு 16 புதிய பேட்டரி வாகனங்கள் வரவு

உடுமலை, செப். 21- உடுமலை நகராட்சியில் குப்பை சேகரிக்க 16 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சியில் திடக்கழிவு மேலாண் மைத் திட்டத்தின் கீழ் சுகாதார பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கு நேரடி யாகச் சென்று குப்பை கள் சேகரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் பிரித்து சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் நுண் உரக்குடில் மூலம் இயற்கை உரமாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது.  நகரில் 33 வார்டுகளில் குப்பைகள் சேகரிக்கும் பணிக்காக ஏற்கனவே 15 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தற்போது மேலும் 16 பேட்டரி வாகனங்கள் மற்றும் 2 சிறிய அளவிலான குப்பை வாகனங்கள் வாங்கப்பட்டு நகராட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளன. இவை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.