tamilnadu

img

சமய நிறுவன நிலங்களின் பயனாளிகளுக்கு நியாய விலையில் கிரயம் செய்து தர வலியுறுத்தல்

திருப்பூர், ஆக. 31 – தமிழகத்தில் சமய நிறுவனங்க ளின் நிலங்களில் பல தலைமுறை களாகக் குடியிருந்து வருவோர், விவ சாய சாகுபடி செய்வோருக்கு நியாய மான விலையில் அந்த நிலத்தைக் கிரயம் செய்து தர வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து சமய நிறுவ னங்களின் நிலங்களில் குடியிருப் போர், சாகுபடி செய்வோர் பாதுகாப் புக் கூட்டமைப்பு வலியுறுத்தி உள் ளது. தமிழ்நாடு அனைத்து சமய நிறு வனங்களின் நிலங்களில் குடியிருப் போர், சாகுபடி செய்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட அமைப்புக் கூட்டம் பல்லடம் ஜெயப் பிரகாஷ் வீதியில் உள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். கண்டியன்கோயில் பாலசுப்பிரமணி யம், திருப்பூர் ஈஸ்வரமூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன், தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன்,மாவட்ட செயலாளர் ஆர்.குமார், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.பஞ்சலிங்கம், பல்லடம் ஒன்றிய விவசாயிகள் சங்க நிர்வாகி வை.பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கோயில் மடம், தேவாலயம்,வக்பு வாரியம் ஆகிய வற்றிற்கு சொந்தமான நிலங்களில்  பல தலைமுறைகளாக குடியிருப்ப வர்கள், சாகுபடி செய்யும் விவசாயி களுக்கே அந்த இடங்களை நியாய மான விலையைத் தீர்மானித்து, அதை தவணை முறையில் பெற்றுக் கொண்டு, அவர்களுக்குக் கிரயம்  செய்து தர வேண்டும். அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்க ளில் குடியிருப்போருக்கு, சாகுபடி செய்வோர்களுக்கு சந்தை மதிப்பின் படி வாடகை, குத்தகை தொகை தீர்மா னிப்பதை கைவிட வேண்டும். முறை யான ஆவணங்கள் வைத்து ஆண் டாண்டுகள் அனுபவித்து வரும் நிலத்தை கிரயம் செய்வதற்கானத் தடையை நீக்க வேண்டும். 100 மடங்கு முதல்  500 மடங்கு வரை வாட கையை உயர்த்தி குடியிருப்போர், கடை வைத்திருப்போர், சாகுபடி யாளர்களை, வாடகை செலுத்தாத ஆக்கிரமிப்பாளர்கள் என்று சட்டப் பிரிவு 78, 79-ஐ பயன்படுத்தி வெளி யேற்றுவது, சீல் வைப்பது, ஏலம் விடுவது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி செப்டம்பர் 17ஆம் தேதி திருப்பூரில் உள்ள இந்து அறநிலை யத் துறை இணை ஆணையர் அலு வலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.  இதில் கூட்டமைப்பின் திருப் பூர் மாவட்ட அமைப்புக்குழு 17 உறுப்பினர்களுடன் தேர்வு செய்யப் பட்டது. மாவட்ட அமைப்பாள ராக தாராபுரம் எம்.ஆர்.வெங்கட்ட ராமன், துணை அமைப்பாளர்களாக ஏ.பஞ்சலிங்கம், வை.பழனிச்சாமி, ஜி.ஈஸ்வரமூர்த்தி, ஜோத்தியம் பட்டி சுப்பிரமணியம், பல்லடம் சுப்பிரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் சமய நிறுவனங்களின் நிலப் பயன்பாட்டாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.