தாராபுரம், செப். 18 - தாராபுரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலா ஜியைக் கண்டித்து தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை, தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவதூ றாக பேசியதாக திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தாராபுரம் காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்குவட்டார தலை வர் நஞ்சியம்பாளையம் பாலு தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் பிரனேஷ் பாலு, நகர தலைவர் செந்தில் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ராஜகோபால், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் முருகானந்தம், கிழக்கு வட் டார தலைவர் முத்துக்குமார் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.