tamilnadu

வாணியம்பாடி: தண்ணீர் தொட்டியில் விழுந்து  2 குழந்தைகள் பலி

ஆம்பூர், ஜூன் 6- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடசேரி பகுதியில் வசிப்பவர்  கார்த்திக். இவர் எலக்ட்ரிஷன் ஆக பணிபுரிந்து வருகிறார்.  இவரது  வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் புதிய வீடு  கட்டி வருகிறார். அந்த வீட்டில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் கார்த்திகை பார்க்க அவரது  ஒன்றரை வயது மகன் பூவை மித்திரன்  சென்று  உள்ளான். அப்போது அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளான். அங்கிருந்தவர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே  இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.  அதேபோல் வாணியம்பாடி அடுத்த மண்டலவாடி பகுதியை  சேர்ந்தவர் மணிஜோதி. இவரது மகன் தர்ஷன் (4).  சிறுவன் குரும்பட்டியில் வசிக்கும் பெரியம்மா சரிதா வீட்டிற்கு  சென்றுள்ளான். அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் விழுந்துள் ளான். உடனடியாக உறவினர்கள் சிறுவனை மீட்டு வாணியம்பாடி அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரி சோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

;