tamilnadu

img

மழை சீசன் முன்கூட்டியே துவங்குமா? மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் குளிர்ந்த காற்று வீசுகிறது

திருநெல்வேலி:
மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கி நீர் கசிவு ஏற்பட்டு வருவதால், தென் மேற்கு பருவ மழை முன் கூட்டியே ஜூன் முதலில் தொடங்க வாய்ப்பு உள்ள தாக தெரிகிறது.

தமிழகத்தை சுட்டெரித்து வந்த அக்னி நட்சத்திர வெயில் புதனுடன் முடிவுக்கு வந்தது. நெல்லை மாவட்டத் தில் அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் அதிகபட்ச மாக 106.4 டிகிரி வரை சென்றது. இதனால் வெப்ப சுழற்சிகாரணமாக பலத்த இடிமின்னலுடனும்  சூறாவளி காற்றுடனும் அவ்வப்போது நெல்லை மாவட்டத்தில் மழை பெய்து பெரும்சேதத் தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் புதனன்று  மாலை நெல்லை மாவட்டத்தில் மேக மூட்டம் சூழ்ந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்ய தொடங்கியது. அதிகபட்சமாக செங்கோட்டையில் 36 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஆய்க்குடியில் 33.2 மில்லி மீட்ட ரும், குண்டாறு பகுதியில்-28, ராமநதி-20, சிவகிரி -15 மில்லி மீட்டரும் மழை பெய்தது. சங்கரன்கோவில், கருப்பாநதி பகுதியில் தலா 12 மில்லி மீட்டரும், அடவி நயினார்-9, தென்காசி-6.4, மணிமுத்தாறு-4.8 மில்லி மீட்டரும் மழை பெய்துள் ளது. இந்த மழை காரண மாக வறண்டு கிடந்த பாபநாசம் அணைக்கு நீர்வரத் தொடங்கி உள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் அதலபாதாளமான 9 அடிக்கு சென்றது. அணையின் உள்பகுதி வெடிப்பு விழுந்து, தேங்கிய சகதி தண்ணீரில்  ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இந்த நிலையில் தற்போது மலைகளின் நீர் கசிவினால் பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 22.69 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணை திறக்கப்பட்டுள்ள தால், அணையில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

தற்போது பாபநாசம் அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து வியாழக்கிழமை  காலை 9.45 அடியாக இருந்தது. மணி முத்தாறு அணைக்கு வினாடிக்கு 57 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 275 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வியாழன்  காலை மணி முத்தாறு அணை நீர்மட்டம் 62.24 அடியாக உள்ளது. இது போல ராமநதி, கடனா நதிக்கும் வினாடிக்கு 2 கன அடி தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீர் அப்படியே நதியில் திறந்து விடப்படுகிறது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 2-வது வாரம் தொடங்கும்.

சில ஆண்டுகளில் முன் கூட்டியே ஜூன் முதலிலேயே தென் மேற்கு பருவ மழை தொடங்கி விடும். அது போல தற்போது மழை பெய்து அணைகளுக்கு லேசாக தண்ணீர் வருவதாலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கி நீர் கசிவு ஏற்பட்டு வருவதாலும், தென்மேற்கு பருவ மழை முன் கூட்டியே ஜூன் முதலில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.