tamilnadu

img

கால்வாயில் பாலம் கட்டப்படாததால் தண்ணீரில் சடலத்தை சுமந்து செல்லும் கிராம மக்கள்

திருநெல்வேலி, டிச.10- ஏா்வாடி அருகே கால்வாயின் குறுக்கே பாலம் கட்டப்படாததால், இறந்தவர் சடலத்தை தண்ணீரில் சுமந்து சென்று கிராம மக்கள் அடக்கம் செய்தனர். நெல்லை மாவட்டம் ஏா்வாடி அருகே உள்ள கட்டளை ஊராட்சி யைச் சேர்ந்த பகுதி புதுத்தெரு கிரா மம். இந்தக் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இந்தக் கிராமத்தில் இறந்த வர்களை அருகில் உள்ள இடுகாட் டில் புதைக்க ஈரடியன் கால்வாய் வழியாகச் சென்று வருகின்றனர். இந்தக் கால்வாயில் மழை நேரத் தில் தண்ணீா் வரும்போது, தண்ணீ ருக்குள் இறங்கி அரை கி. மீட்டர் தூரம் நடந்து சடலத்தை சுமந்து செல்ல வேண்டியிருக்கிறது. கால்வாயின் குறுக்கே பாலம் கட்டித்தருமாறு இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. இக்கோரிக்கை யை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் நான்குனேரி இடைத்தேர்தலின்போது தங்கள் பகுதியில் கருப்புக் கொடியேற்றி யிருந்தனர்.  இந்நிலையில், திங்கள்கிழமை இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஞான செல்வம் (90) என்பவர் இறந்து விட்டார். ஈரடியன் கால்வாய் வழி யாக இடுப்பளவு தண்ணீருக்குள் சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்தனர். இனியாவது ஈரடியன் கால்வாயில் பாலத்தைக் கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர். மேலும், பாலம் கட்டித் தரப்படாத நிலையில் தங்களது குடும்ப அட்டை, வாக்கா ளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப் போவ தாகவும் தெரிவித்துள்ளனர்.