tamilnadu

img

மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில மாநாடு

திருநெல்வேலி:

தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியமைப்பின் 16ஆவது மாநில மாநாடு நெல்லையில் வரும் ஆகஸ்ட் மாதம் 17,18,19 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான வர

வேற்பு குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது.


பாளையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு சி.ஐ.டி.யு மின் ஊழியர் மத்தியமைப்பு மண்டல செயலாளர் எம்.பீர் முகம்மது ஷா தலைமை தாங்கினார். திட்ட துணை தலைவர் டி.கந்தசாமி வரவேற்று பேசினார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீ.பழனி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன், மாநில குழு உறுப்பினர் எஸ்.பெருமாள், மின் ஊழியர் மத்தியமைப்பு மாநில செயலாளர்கள் எஸ்.வண்ணமுத்து , எஸ்.அப்பாதுரை, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில நிர்வாகி எஸ்.ராஜாமணி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கற்பகம், சிஐடியு மாவட்ட துணை தலைவர் எம்.சுடலைராஜ் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் சிஐடியு மின் ஊழியர் மத்தியமைப்பு மாநில தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், மாநில பொது செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மாநில பொருளாளர் எம்.விக்டேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்திட முடிவெடுக்கப்பட்டது.


இதுதவிர மாநாட்டிற்கான வரவேற்பு குழு தேர்வு செய்யப்பட்டது மாநாட்டு வரவேற்பு குழு கவுரவ தலைவராக வீ.பழனி,தலைவராக எம்.பீர் முகம்மது ஷா, செயலாளராக எஸ்.வண்ணமுத்து, பொருளாள ராக டி.கந்தசாமி உள்ளிட்ட 113 கொண்ட வரவேற்பு குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. சங்க திட்டப் பொருளாளர் பி.நாகையன் நன்றி கூறினார்.