tamilnadu

img

குறைந்தபட்ச கூலி ரூ.18000 வழங்கிடுக! சிஐடியு நகை மதிப்பீட்டாளர் சங்கம் வலியுறுத்தல் 

 திருநெல்வேலி, ஆக.12- வங்கிகளில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.18ஆயிரம் வழங்கிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நெல்லையில் நடைபெற்ற சிஐடியு அனைத்து வங்கி நகை மதிப்பீட்டா ளர்கள் சங்கம் ஆண்டு பேரவை நிறைவேற்றியுள்ளது. பாளை. நவஜீவன் டிரஸ்டில் சிஐடியு அனைத்து வங்கி நகை மதிப்பீட்டாளர்கள் சங்கத்தின் 3வது ஆண்டு பேரவை கூட்டம் நடை பெற்றது. பேரவை கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் எஸ்.பெரு மாள் தலைமை தாங்கினார், நிர்வாக குழு உறுப்பினர்கள் பாலசுப்பிர மணியன், அகஸ்தியன் கோபிநாத், மணிகண்டன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சங்க துணை தலைவர் எஸ்.மந்திரம் வரவேற்று பேசினார்.  சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.சுடலைராஜ் ஆண்டு பேரவை கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சங்க மாவட்ட பொதுச் செயலாளர் டி.மகாராஜன் வேலை அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். வரவு-செலவு அறிக்கை யை சங்க மாவட்ட பொருளாளர் வேல்முருகன் சமர்ப்பித்து பேசி னார். சிஐடியு நகை தொழிலாளர் பாதுகாப்பு பேரவை தலைவர் மாரிச்செல்வம் ,பொது செயலாளர் எஸ்.கே.செந்தில் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  பேரவைக் கூட்டத்தில் நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச கூலி ரூ.18,000 வழங்க வேண்டும், இபிஎப், இஎஸ்ஐ பிடித்தம் செய் திட வேண்டும், பணி அச்சுறுத்தல் காட்டி மிரட்ட கூடாது, நகை மதிப் பீட்டாளர் சம்பளத்திற்கு ஜிஎஸ்டி பிடித்தம் செய்வதை கைவிட வேண் டும், நகை மதிப்பீட்டாளர் கட்ட ணம், வங்கி கட்டணங்களை தனித் தனியாக அமுல்படுத்த வேண்டும். துறை ஊழியர்களுக்கு வழங்குவது போன்று அனைவருக்கும் பண் டிகை கால முன்பணம் வழங் கிட வேண்டும், இடைக்கால நிவா ரணமாக 10000 வரை குறைந்தபட்ச மதிப்பீட்டுக் கட்டணம் ரூ.100ம் அதன்பின்பு வழங்கும் ஒவ்வொரு 1000க்கும் 5 வீதம் கடன் ரூ.1லட்சம் வரை ரூ.550 வழங்கிட வேண்டும், பிடிலிட்டி கியாரண்டி பாலிசியை ரத்துசெய்திட வேண்டும், அனை வருக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும், நகை பரி சீலனைக் கட்டணம் பாக்கெட் ஒன்றிற்கு ரூ.10 வீதம் அல்லது நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.1000 வழங்கிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் தலைவர் ஏ. கிருஷ்ணமூர்த்தி நிறைவுரை யாற்றினார்.சங்க துணை தலைவர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.சிஐடியு நகை மதிப்பீட்டாளர் சங்கம் வலியுறுத்தல்  திருநெல்வேலி, ஆக.12- வங்கிகளில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.18ஆயிரம் வழங்கிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நெல்லையில் நடைபெற்ற சிஐடியு அனைத்து வங்கி நகை மதிப்பீட்டா ளர்கள் சங்கம் ஆண்டு பேரவை நிறைவேற்றியுள்ளது. பாளை. நவஜீவன் டிரஸ்டில் சிஐடியு அனைத்து வங்கி நகை மதிப்பீட்டாளர்கள் சங்கத்தின் 3வது ஆண்டு பேரவை கூட்டம் நடை பெற்றது. பேரவை கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் எஸ்.பெரு மாள் தலைமை தாங்கினார், நிர்வாக குழு உறுப்பினர்கள் பாலசுப்பிர மணியன், அகஸ்தியன் கோபிநாத், மணிகண்டன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சங்க துணை தலைவர் எஸ்.மந்திரம் வரவேற்று பேசினார்.  சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.சுடலைராஜ் ஆண்டு பேரவை கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சங்க மாவட்ட பொதுச் செயலாளர் டி.மகாராஜன் வேலை அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். வரவு-செலவு அறிக்கை யை சங்க மாவட்ட பொருளாளர் வேல்முருகன் சமர்ப்பித்து பேசி னார். சிஐடியு நகை தொழிலாளர் பாதுகாப்பு பேரவை தலைவர் மாரிச்செல்வம் ,பொது செயலாளர் எஸ்.கே.செந்தில் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  பேரவைக் கூட்டத்தில் நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச கூலி ரூ.18,000 வழங்க வேண்டும், இபிஎப், இஎஸ்ஐ பிடித்தம் செய் திட வேண்டும், பணி அச்சுறுத்தல் காட்டி மிரட்ட கூடாது, நகை மதிப் பீட்டாளர் சம்பளத்திற்கு ஜிஎஸ்டி பிடித்தம் செய்வதை கைவிட வேண் டும், நகை மதிப்பீட்டாளர் கட்ட ணம், வங்கி கட்டணங்களை தனித் தனியாக அமுல்படுத்த வேண்டும். துறை ஊழியர்களுக்கு வழங்குவது போன்று அனைவருக்கும் பண் டிகை கால முன்பணம் வழங் கிட வேண்டும், இடைக்கால நிவா ரணமாக 10000 வரை குறைந்தபட்ச மதிப்பீட்டுக் கட்டணம் ரூ.100ம் அதன்பின்பு வழங்கும் ஒவ்வொரு 1000க்கும் 5 வீதம் கடன் ரூ.1லட்சம் வரை ரூ.550 வழங்கிட வேண்டும், பிடிலிட்டி கியாரண்டி பாலிசியை ரத்துசெய்திட வேண்டும், அனை வருக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும், நகை பரி சீலனைக் கட்டணம் பாக்கெட் ஒன்றிற்கு ரூ.10 வீதம் அல்லது நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.1000 வழங்கிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் தலைவர் ஏ. கிருஷ்ணமூர்த்தி நிறைவுரை யாற்றினார்.சங்க துணை தலைவர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.