tamilnadu

காவல்துறையினர் தாக்கியதில் தந்தை, மகன் மரணம்: உடல்களை வாங்க மறுத்து குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டம்

திருநெல்வேலி, ஜூன் 24- காவல்துறையினரால் தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் மரண மடைந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் ஆகியோரின் உடல்களை  வாங்க மறுத்து அவர்களது குடும்பத்தினர்,உறவினர்கள் புதனன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவில்பட்டி கிளைச் சிறையில் விசார ணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவத்தில் போலீசார்  அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டினர்.  காவல்துறையைக் கண்டித்து புதனன்று தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், உயிரிழந்த தந்தை, மகன் உடல்கள், பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்படுகின்றன. பிரேத பரிசோதனை முழு வதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

இதற்காக பிரேதப் பரிசோதனை மையத்திற்கு வந்த கோவில்பட்டி மாஜிஸ்தி ரேட் பாரதிதாசன், மருத்துவக் கல்லூரி முதல்வ ருடன், ஆலோசனை நடத்தினார். பின்னர் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண அவர்களது உறவினர்கள் மற்றும் மாஜிஸ்திரேட் சென்று உறுதி செய்தனர். இதற்கிடையே, தந்தை, மகன் உடல்களை வாங்க மாட்டோம் எனக் கூறி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். கொலை வழக்காக பதிவு செய்யும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என்று, ஜெய ராஜின் மகள் பெர்சி கூறினார். இரட்டை கொலைக்கு என்ன தண்டனையோ அதனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி னார். பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அரச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தா.ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.எஸ். முத்து, வக்கீல் சுப்பு முத்துராமலிங்கம் உள் ளிட்டோர் வந்தனர்.