திருநெல்வேலி, ஜூன் 13- ஜனநாயக வாலிபர் சங்க நெல்லை மாவட்ட முன்னாள் பொருளாளராக இருந்த அசோக் கடந்த ஆண்டு சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவு தினமான வெள்ளிக்கிழமை திரு நெல்வேலி மாவட்டம் முழுவ தும் அவரது உருவப்ப டத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தென்காசி மாவட்டம் பா வூர்சத்திரம் கட்சி அலுவல கத்தில் சிபிஎம் ஒன்றியச் செய லாளர் தங்கம் தலைமையில் அஞ்சலி கூட்டம் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.வேல்முரு கன், ஒன்றிய கமிட்டி உறு ப்பினர்கள் அய்யாத்துரை, ஆரியமுல்லை, தர்மக்கனி, முத்துலெட்சுமி, இன்னியாசி, திருமலை ஆகியோர் அசோக் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி னர். பாப்பாக்குடி கமிட்டியில் ஒன்றியச் செயலாளர் கே.மாரிசெல்வம் தலைமை யில், மாரியப்பன், சங்கர், வெங்கடேஷ், ஆறுமுகம், பத்மா ஆகியோர் கலந்து கொண்டனர். வீரவநல்லூர் நயினார் காலனி, தம்பிரான் காலனி பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதே போல் வெள்ளங்குளியிலும் அசோக் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப் பட்டது. வீரவநல்லூர் கட்சி அலு வலகத்தில் நடைபெற்ற நினைவு தின கூட்டத்தில் வீர வநல்லூர் முன்னாள் பேரூ ராட்சி தலைவர் எஸ்.கே.பழ னிச்சாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கற்ப கம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பத்தமடை கட்சி அலுவலகத்தில் கிளைச் செயலாளர் பக்கீர் மைதீன், நாகூர், முத்து, ராஜா உள்ளிட் டோர் கொண்டனர்.