tamilnadu

img

ஒரத்தநாடு ஏரிக் கரை பலப்படுத்தும் பணி

தஞ்சாவூர் செப்.14- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம், தென்னமநாடு ஊராட்சி குளம், புதூர் ஊராட்சி கோலிகுழி குளம், பேய்கரம்பன்கோட்டை கிராமம் பெரிய ஏரி, துறையூர் தோட்டத்து பிள்ளையார் குளம் ஆகியவற்றில், கரைகளைப் பலப்படுத்தி தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மேலும், துறையூர் தோட்டத்து பிள்ளையார் குளம் அருகில் பள்ளி அமைந்துள்ளதால், பசுமை வேலி அமைத்திடுமாறு அறிவுறுத்தினார். ஆய்வின் போது ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.