tamilnadu

img

‘மனநலம் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும்’

புதுக்கோட்டை: மாவட்ட மனநலத் திட்டத்தின் சார்பில் கல்லூரி அளவிலான மனநல விழிப்புணர்வு தூதுவர் குழு பேராசிரியர்களுக்கான விளக்கக் கூட்டம் மற்றும் பயிற்சி வகுப்பு புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டு அவர் பேசியது:  போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் படித்து பல்வேறுத் துறைகளில் உயர்ந்த நிலையை அடைந்து வரும் இளைய தலைமுறையினர் மனிதநேயம் மிக்க நல்ல மனிதர்களாக திகழ்ந்திட மனநலத்தை சிறந்த முறையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். கல்லூரி யில் பயிலும் மாணவிகளின் மனநலத்தை மேம்படுத்தவும், அவர்களின் மனநல பிரச்சனை களை எளிதில் அணுகும் வகையில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளை உறுப்பி னர்களாக கொண்டு கல்லூரி அளவிலான மனநல தூதுவர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மாணவிகளிடையே மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதற்குரிய பயிற்சிகள் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனையில் மாவட்ட மனநல ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. மனநல ஆலோசனை தேவைப்படு வோர் இம்மையத்தை அணுகி பயன்பெறலாம். இதே போன்று மனநல தூதுவர்களின் உரிமைக ளான மனநலம் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் மற்றும் சேவைகள் பற்றி அறிந்து மனநல பிரச்சணைகளுக்கு ஆலோசனைகள் பெறலாம். மேலும் 24 மணிநேரமும் மனநலம் குறித்த சந்தேகங்களை தெரிந்துகொள்ள 9486067686 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மனநல தூதுவர்கள் மனநலம் மற்றும் மனநலத் திட்டம் பற்றியும் சகமாணவிகள், குடும்பத்தினரிடம் தன்னார்வத்துடன் விழிப்பு ணர்வை ஏற்படுத்தி கடமையாற்ற வேண்டும் என்றார். இணை இயக்குநர் மருத்துவப் பணிகள் மரு.சந்திரசேகரன், வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, மாவட்ட மனநலத்திட்ட மருத்துவர் மரு.கார்த்திக் தெய்வநாயகம், கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.