கும்பகோணம் ஜூலை 11- தஞ்சை மாவட்டத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பயன் படுத்திய தனியார் வாகனங்களுக்கு வாடகை தராமல் அரசு அதிகாரிகள் மூன்று மாதமாக தாமதப்படுத்துவது ஏன் என சாலை போக்குவரத்து தொழி லாளர் சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்த லுக்கு ஒரு மாதமாக எங்கள் சங்கத்தின் தொழிலாளர்கள் தனியார் வாக னங்களை வாடகைக்கு கேட்டதின் பேரில் சட்டப்படி அனைத்து ஆவ ணங்களும் கொடுத்து தேர்தல் பணிக் காக பறக்கும் படை மற்றும் அதிகாரி கள் செல்வதற்கு வாகனத்திற்கு தகுந் தார் போல் தினசரி வாடகையாக பேசி தொழிலாளர்கள் சென்றார்கள். அப்போது இரவு பகலாக தேர்தல் பணியில் தொழிலாளர்கள் தேர்தல் அதிகாரிகளோடு பறக்கும் படை அதி காரிகள் அதிகாரிகளோடும் பணி யாற்றி வந்தார்கள். ஆனால் தேர்தல் நடைபெற்று 3 மாதமாகியும் இதுவரை சுமார் 10 லட்சம் அளவில் தேர்தலுக் காக பயன்படுத்திய வாகனங்களுக்கு வாடகை தராமல் மாவட்ட நிர்வா கம் காலம் தாமதித்து வருகிறது. வாடகை தருமாறு அதிகாரிகளிடம் கேட்டால் ஒவ்வொரு வாகனத்திற் கும் தனது லெட்டர் பேடில் பில் தர வேண்டும் என்றும் அப்படித் தந்தால் தான் கொடுக்க முடியும் என்றும் அதி காரிகள் கூறி தொழிலாளர்களுக்கு தேவையில்லாத மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார்கள். தொழிலாளர்கள் அனைவரிடமும் லெட்டர் பேடு கேட்பது அநியாயமாக உள்ளது இது நடைமுறைக்கு சாத் தியமில்லாத செயலாக அதிகாரிகள் நடந்து வருகிறார்கள். வாகன தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தேர்தல் பணிக்காக வாடகைக்கு சென்ற வாக னங்களுக்கு உடனடியாக நிலுவை யிலுள்ள வாடகை பாக்கியை பட்டு வாடா செய்ய வேண்டும். சங்கம் சார்பில் பல முறை அதிகாரி களை சந்தித்து கோரிக்கை வைத்தும் இதுவரை செயல்படுத்தாது வேத னைக்குரிய செயலாக கருதுகிறோம். ஆகவே போர்க்கால அடிப்படையில் தேர்தலுக்காக பயன்படுத்திய வாக னங்களின் வாடகையை உடனடியாக தர வேண்டும். அப்படி தராத பட்சத்தில் தொழிலாளர்களைத் திரட்டி மாவட்டம் முழுவதும் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என சங்க மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதி தெரிவித் துள்ளார்.