tamilnadu

திருச்சிராப்பள்ளி மற்றும் சீர்காழி முக்கிய செய்திகள்

ஜிஎஸ்டி ஆலோசகர் மாநாடு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 24- தமிழ்நாடு ஜிஎஸ்டி ஆலோசகர்களின் மாநில முகவரி மாநாடு திருச்சியில் திங்களன்று நடைபெற்றது. மாநாட் டிற்கு சங்க தலைவர் முஹம்மத் அஸ்கர் தலைமை வகித்தார். மாநாட்டில் முகவர் மலரை கென்னடி வெளியிட அதை ஜிஎஸ்டி இணை ஆணையர் பொன்மாலா பெற்றுக் கொண்டார். முன்னதாக பொதுச்செயலாளர் பஷிர்அலி வர வேற்றார். ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் கச்சபேஸ்வ ரன் நன்றி கூறினார்.

கொட்டாய்மேடு கிராமத்தில் செயல்படாத மகளிர் சுகாதார வளாகம்

சீர்காழி, ஜூன் 24- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடலோர கிராமம் கொட்டாய்மேடு. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி யின் உள்ள பெண்களின் நலன் கருதியே மகளிர் மற்றும் குழந்தை கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. இதில் மின்மோட்டார் அறை, 10 கழிவறைகள் மற்றும் குளியலறை வசதிகளு டன் இந்தக் கட்டடம் கட்டப்பட்டு இயங்கி வந்தது. ஆனால் சில மாதங்களிலேயே இந்த சுகாதார வளாகக் கட்டடம் எந்த பயனுமின்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் இப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதியடைந்து வருகின்றனர். நிலத்தடி நீரை எடுத்து தேக்கி வைத்து பயன்படுத்தும் வகையில், நீர்த்தேக்க தொட்டி யும் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அனைத்தும் பயனற்று கிடக்கிறது. இக்கட்டடத்திற்குள் உள்ள மின்மோட்டாரும் பழுதடைந்து உள்ளது. எனவே 5 ஆண்டுக்கும் மேலாக பூட்டியே கிடக்கும் மகளிர் சுகாதார வளா கத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வெண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.