tamilnadu

திருச்சிராப்பள்ளி மற்றும் நாகப்பட்டினம் முக்கிய செய்திகள்

டெங்கு கொசுப் புழுக்களை கண்டறிந்து வீடுகள், தனியார் கட்டுமான குடியிருப்புகளுக்கு அபராதம்  

திருச்சிராப்பள்ளி, அக்.30- ஸ்ரீரங்கம் கோட்டம் 8-வது வார்டு மூவேந்தர் நகர் பகுதியில் வீடுகளில் தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் இணைந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் கொசுப்புழு ஒழிக்கும் பணி, புகை மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார்.  மேலும், மாநகராட்சி பகுதி முழுவதும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை ஆய்வு செய்தபோது திறந்த நிலையில் உள்ள தூய தண்ணீர் சேமித்து வைக்கப்பட்ட கலன்கள், தொட்டிகள், டயர்கள், காலி டப்பாக்கள் ஆகியவற்றில் உள்ள சிறிதளவு தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் லார்வா கண்டறியப்பட்டு அதற்கான ஆதாரங்கள் வீடுகள் தோறும் இருப்பது அகற்றப்பட்டு வருகிறது. வீடுகள் மற்றும் வணிக வளாக கட்டிடங்களில் டெங்கு காய்ச்சல் உண்டாக்கும் கொசு உற்பத்தி ஆதாரங்கள் அகற்றப்படாமல் இருப்பது தண்டனைக்குறிய குற்றமாகும்.  ஆகவே, மாநகராட்சி பகுதியில் இதுபோன்ற கொசு உற்பத்தி ஆதாரங்களை உடனடியாக தாமாக அகற்றிக்கொள்ள வேண்டும். அகற்றாதபட்சத்தில் அபராதம் விதிக்கபடுவதுடன் குடிநீர் இணைப்பை துண்டிக்க நேரிடும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். மேலும் வீடுகள் மற்றும் தனியார் கட்டுமான குடியிருப்புகளில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து கொசுக்கள் உற்பத்திக்கான ஆதாரங்களான தேவையற்ற பழைய டயர்கள், ஓடுகள், ஓட்டை உடைசல் சாமான்களை வைத்திருந்தவர்களுக்கு அக்டோபர் மாதத்தில் ரூ.1,25,000 அபராதம் வசூலிக்கப்பட்டது என்றார்.  இந்த ஆய்வில் செயற்பொறியாளர் சிவபாதம், உதவி ஆணையர் வைத்தியநாதன் உடனிருந்தனர்.

நாகப்பட்டினம் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள்:  தகவல் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு 

நாகப்பட்டினம், அக்.30- நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிப் பகுதிகளில் தனியார் மற்றும் துறை சார்ந்த நிறு வனங்களின் சார்பில் நிறுவப்பட் டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் கிணறுகளின் மேற்பகுதி களில் பாதுகாப்பான முறையில் மூடப்பட்டிருக்க வேண்டும். தற்போது பயன்பாட்டிலுள்ள மற்றும் பயன்பாட்டில் இல்லாத ஆழ் துளைக் கிணறுகளும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஆழ்துளைக் கிணறுகளும் மூடி போட்டு மூடப்பட்டி ருக்க வேண்டும். தனியாருக்குச் சொந்தமான ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருப்பது கண்டறியப் பட்டால், கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்கள் குடி யிருப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் தனியார் மற்றும் துறை சார்ந்த நிறுவனங்கள் சார்பில் அமைக்கப் பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள்  மூடப்படாமலும் ஆபத்தை விளை விக்கும் நிலையிலும் இருந்தால், உட னடியாக மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திலுள்ள பேரிடர் மேலாண்மைக் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். ஆழ்துளை கிணறு அமைந்துள்ள இடம் குறித்த விவரம், தெளிவான புகைப்படங்களுடன் 8300681077 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தெரிவித்துள்ளார்.