tamilnadu

img

குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

திருச்சிராப்பள்ளி, ஜூன் 19- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் சமயபுரம் எஸ்.கண்ணணூர் பேரூ ராட்சி எஸ்.கள்ளுக்குடியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி யில் கடந்த 3 மாதங்களாக சரி வர குடிநீர் வழங்கப் படுவதில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும், பல்வேறு போராட் டங்கள் நடத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை.  இதனை கண்டித்தும், உடனே குடிநீர் வழங்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றி யக்குழு உறுப்பினர் சிவக்குமார் தலைமையில் காலிக் குடங்களுடன் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்தை விளக்கி சிபிஎம் ஒன்றிய செயலாளர் கனகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்துராஜ் ஆகியோர் பேசினர்.  பாலகிருஷ்ணன், சேதுராமன், ராமசாமி, ஜோதிபாசு, சேகர், சிஐடிய கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதிய ளித்தனர். இதனையடுத்து முற்றுகை போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. 

;