tamilnadu

img

சிஐடியு பயிற்சி மையத்தில் பயின்று அரசுப் பணியில் சேர்ந்த மாணவிகள்

பயிற்சி மைய மேம்பாட்டிற்கு நிதி வழங்கினர் 

கும்பகோணம் நவ.10- கும்பகோணம் அரசு போக்கு வரத்து தொழிலாளர்கள் சிஐடியு அலு வலக மேல் தளத்தில் டாக்டர் அம் பேத்கர் வேலைவாய்ப்பு மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இதில் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் எவ்வித கட்டணம் இல் லாமல் பயிற்சி அளித்து வருகின்ற னர் இதில் ஏராளமானோர் இந்த மையத்தில் பயிற்சி பெற்று அரசு தேர்வு களில் வெற்றி பெற்று பயனடைந்து வரு கிறார்கள்.  இந்நிலையில் இம்மையத்தில் பயிற்சி பெற்று அரசுப் பணிக்கு சேர்ந்த நந்தினி, ராஜேஸ்வரி இருவரும் ரூ.5000 மையத்தின் கட்டிட மேம்பாட்டு நிதி யாக சங்க பொதுச் செயலாளர் மணி மாறன் மற்றும் கௌரவத் தலைவர் ஆர்.மனோகரன் ஆகியோரிடம் வழங்கி னார்கள். இந்நிகழ்வில் சிபிஎம் நகரச் செயலாளர் செந்தில்குமார், முன்னாள் வட்டாட்சியர் பழ.அன்புமணி பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுதர்சன் மற்றும் பயிற்சி மாணவர்கள் உடன் இருந்த னர்.