tamilnadu

சீர்காழி மற்றும் தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

குட்டையில் தவறி விழுந்து  பெண் பலி

சீர்காழி, ஜூன் 20- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருச்சிற்றம் பலம் கிராமத்தைச் சேர்ந்த ரோசாரியா என்பவரின் மனைவி மேரி(52), கூலித் தொழிலாளி. கடந்த 10 ஆண்டுக்கு முன்பு கணவர் இறந்து விட்டதால் மகன்கள் ஜெயக் குமார்(24), ஜெகன்ராஜ்(22), மகள் ஆக்லைவ்மேரி(21) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் சம்ப வத்தன்று மாலை திருச்சிற்றம்பலம் கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பெரிய குட்டையின் கரை யில் ஆடுகளை ஓட்டிச் சென்ற போது தடுமாறி குட்டை யில் விழுந்த மேரி நீச்சல் தெரியாமல் தண்ணீருக்குள் மூழ்கி இறந்தார். இதுகுறித்து கொள்ளிடம் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணினி இயக்குபவர்  பயிற்றுநர் தேர்வு 

தஞ்சாவூர்,  ஜூன் 20- தஞ்சாவூர் மாவட்டத்தில் வரும் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணினி இயக்குபவர் பயிற்றுநர் நிலை-1(முதுநிலை ஆசிரியர் நிலை) பணிக்கான கணினி வழி தேர்வு நடைபெறவுள்ளது. இதில் கும்பகோணம் அன்னை பொறியியல் கல்லூரியில் 314 பேரும், தஞ்சாவூர் ரேஸ் பயிற்சி நிறுவனத்தில் 99 பேரும் தேர்வு எழுத வுள்ளனர்.  இதுகுறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், ஆட்சியர் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் எம்.ராம கிருஷ்ணன் உள்பட பல துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

;