குழித்துறை,மே 25-குமரி மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக ரப்பர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. பால்வடிப்பு தொடங்கிய பிறகும் இந்த வலைவிலை உயர்வு நீடித்தால் விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைக்கும்.தமிழகத்தில் ரப்பர் சாகுபடி நடைபெறுகின்ற மாவட்டமாக குமரி மாவட்டம் இருந்து வருகிறது இங்கு சுமார் 25 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் ரப்பர் பயிரிடப்பட்டு வருகிறது இங்கிருந்து உற்பத்தி செய்யபடும் ரப்பர் உலக தரம் வாய்ந்ததாக உள்ளது. இதில் தமிழ்நாடு அரசு ரப்பர் கழகம் வாயிலாக சுமார் 5 ஆயிரம் ஹெக்டர்பரப்பில் பயிரிடபடுகிறது. கீரிப்பாறை , காளிகேசம், குற்றியாறு, மணலோடை, கோதையாறு, சிற்றாறு, மயிலாறு டிவிஷன்களில் அரசு ரப்பர் கழகம் அதிகம் பயிரிட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டில் மாவட்டத்தில் ஒரு கிலோ ரப்பர் ரூபாய் 240 வரை விலை உயர்ந்தது. ஆனால் அதன் பிறகு ரப்பர் விலை பெருமளவு உயரவில்லை. ரப்பர் விலை கடுமையாக சரிவு ஏற்பட்டது. அதன்பிறகு ரூபாய் 100 முதல் 150 என்ற வகையிலேயே ரப்பரின் விலை நீடித்தது.கடந்த 2017-18 ஆண்டு சராசரி விலை ஆர்எஸ்எஸ் 4 கிரேடுக்கு ரூபாய் 129. 80 ஆக இருந்தது ஆர்எஸ்எஸ் கிரேடு 5 ரூபாய் 126. 46 ஆகஇருந்தது.இந்நிலையில் கடந்த 20 நாட்களாக ரப்பர் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. இது ரப்பர் விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. கோட்டயம் , கொச்சி , மார்கெட்டுகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஆர் எஸ் எஸ் கிரேடு 4 ரப்பர் கிலோ130.50 ஆகவும், ஆர்எஸ்எஸ் கிரேடு 5 ரப்பர் கிலோ 128.50 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. வெள்ளியன்று ஆர்எல்எஸ் கிரோடு 4 ரூ.140 ஆகவும் ஆர்எஸ்எஸ் கிரோடு 5 ரூபாய் 137 ஆக இருந்தது. கோடையில் இலையுதிர்ந்து பால்சுரப்பு குறையும் என்பதால் பால் வடிப்புநிறுத்தப்படுவது வழக்கும். மழை பெய்து இலைகள் துளிர்த்த பிறகே ரப்பர் பால்வடிப்பு மீண்டும் தொடங்கும். தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வு ரப்பர் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ளதாக ரப்பர்விவசாயிகள் கூறுகின்றனர். பால்வடிப்பு தொடங்கிய பிறகும் இந்த விலை உயர்வு நீடித்தால் மட்டுமே தங்களுக்கு பலன் என்கிறார்கள் விவசாயிகள்.