tamilnadu

திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் ரூ.4 லட்சம் பறிமுதல்

திருச்சிராப்பள்ளி, ஏப்.21- திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சனிக்கிழமை இரவு தனியார் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெரம்பலூரை சேர்ந்த தர்மராஜ்(48) என்பவரின் உடைமைகளை சோதனை செய்த போது ரூ.4லட்சத்தை(இந்திய ரூபாய்) உடைமைகளுக்குள் மறைத்து வைத்து மலேசியாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;