tamilnadu

img

பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி, ஜூலை 12-   புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளை வியாபாரம் செய்ய விடாமல் தடுக்கும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், இதர பேரூராட்சி பேருந்து நிலையங்களில் வியாபாரம் செய்வதை போல பொன்னமராவதி பேருந்து நிலையத்திலும் அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர் சங்க(சிஐடியு) கிளை சார்பில் அதன் தலைவர்  எம்.அய்யாவு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் க.செல்வராஜ், சிஐடியு மாவட்ட செயலாளர் க.முகமது அலி ஜின்னா ஆகியோர் சிறப்புரையாற்றினர். சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.தீன், அனைத்து போக்குவரத்து சங்க என்.பக்ருதீன் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கினர். கிளை துணைத்தலைவர்கள், கிளை பொருளாளர் எஸ்.கண்ணன், கிளை துணைச் செயலாளர்கள் செ.சௌந்தரம், ஏ.நல்லு, நிர்வாகிகள் வி.பஞ்சவர்ணம், வி.எஸ்.ஆர்.கனி, சி.சுப்ரமணி, எம்.புரோஸ்கான், ஏ.ஒய்யம்மாள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

;