கும்பகோணம் ஜூலை 6- கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த இ-சேவை மையம் தற்போது சக்கர படித்துறை உள்ள ஒரு பள்ளியில் இயங்கி வருகிறது. இங்கு சிறியவர், பெரியவர்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் கும்பகோணம் சக்கர படித்துறை தெருவில் 5 வயது சிறுவன் அழுத நிலையில் திரிந்து கொண்டிருந்தான். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் நடத்தி வரும் ராஜா- லலிதா தம்பதியினர் சிறுவனை அழைத்து விசாரித்தனர். அவன் தகவல் சரியாக சொல்ல தெரியாததால் கும்பகோணம் மகளிர் காவல் நிலையத்தில் சிறுவனை ஒப்படைத்தனர். பிறகு காவல்துறையினர் விசாரித்த போது, கும்பகோணம் அருகே உள்ள ஏனநல்லூர் கிராமத்தில் வசித்து வரும் பாலு- வள்ளி மகன் விக்னேஷ் என்பது தெரியவந்தது உடன் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பின்னர் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அப்போது சிறுவன் விக்னேஷ், ஆதார் அட்டை எடுப்பதற்காக அழைத்து வந்ததாகவும், உள்ளே படிவம் பூர்த்தி செய்து கொடுக்கும் போது தவறுதலாக வெளியே சிறுவன் போய் விட்டதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.