tamilnadu

img

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பொன்னமராவதி, மே 25-பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 1994-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் தங்கள் பள்ளிக்கால நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். பள்ளிக்கு நினைவுப் பரிசும் வழங்கினர். நிகழ்வில் பள்ளி முதல்வர் வே.முருகேசன், தனி அலுவலர் நெ.இராமச்சந்திரன், பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் சுப்பையா, பொன்னழகு மற்றும் முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

;