தஞ்சாவூர், ஜூலை 3- தஞ்சாவூர் மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யாததால் வறட்சி ஏற்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் குறை வாக உள்ளது. இதனால், குடிநீர் தட்டுப் பாடின்றி பொதுமக்களுக்கு கிடைத் திட அரசு போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுத்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாத்துரை உத்தரவின்படி மற்றும் பேரூராட்சிகள் மண்டல உதவி இயக்குனர் அறிவுரைப்படி, பெருமக ளூர் பேரூராட்சி பகுதியில் குடிநீர் விநி யோகம் நடைபெறுவதை, அம்மா பேட்டை செயல் அலுவலர் மு.பொன் னுச்சாமி தலைமையில், பெருமகளூர் பேரூராட்சி செயல் அலுவலர் சக்தி வேல் மற்றும் பேரூராட்சி பணியாளர் கள் பார்வையிட்டனர். ஜீவா நகர், வள்ளுவர் நகர், அண்ணா நகர் பகுதிகளில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மற்றும் சிறு மின்விசைப் பம்புகள் மூலம் இயங்கும் தண்ணீர் தொட்டிகளை ஆய்வு மேற்கொண்டனர். இப்பகுதியில் சீராக குடிநீர் கிடைக்கிறதா என பொதுமக்க ளிடம் கேட்டறிந்தனர். இவ்வாய்வின் போது மின் மோட் டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை எச்ச ரித்தும், தொடர்ந்து மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுப்பது தெரிய வந்தால் மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிப்பதுடன், குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிக்கப் படும் என எச்சரித்தனர். தொடர்ந்து பெருமகளூர் ஆர்.கே.நகரில் உள்ள காவேரி கூட்டு குடிநீர் வழங்கும் 50,000 லிட்டர் கொண்ட குடிநீர் வரத்து மற்றும் விநியோகம் குறித்து உறுதி செய்தனர்.