நாளை அம்மா திட்ட முகாம்
பெரம்பலூர், நவ.13- பெரம்பலூர் மாவட்டத்தில் 15.11.2019 அன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் வருவாய் கிராமங்களின் விபரம் குறித்து ஆட்சியரக செய்திக்குறிப்பில், பெரம்பலூர் வட்டத்தில் அரணாரை (தெற்கு), வேப்பந்தட்டை வட்டத்தில் தொண்டமாந்துறை (கிழக்கு), குன்னம் வட்டத்தில் அத்தியூர்(தெற்கு) மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் புதுஅம்மா பாளையம் ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளன. பொதுமக்களின் பல்வேறு கோரிக் கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷவண்டு கடித்து 8 பேர் மருத்துவமனையில் அனுமதி
சீர்காழி, நவ.14- நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கூத்தா நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அசுபதி மகன் ஆனந்தராஜ் (20), செந்தாமரை(48), கண்ணுக்கினி யனார் கோயில் கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (63), வாடி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம்(55), இளந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த மகா லிங்கம்(60), ஆறுமுகம் (65), வேம்படி கிராமத்தைச் சேர்ந்த துர்கா(18), அகரவட்டாரம் கிராமம் மேலத் தெருவைச் சேர்ந்த தாமரைச்செல்வன்(37) ஆகிய 8 பேரும் செவ்வாயன்று இளந்தோப்பிலிருந்து நல்ல நாயகபுரம் செல்லும் சாலை யில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் சீர்காழி பகுதிக்கு வருவதற்காக காத்திருந்தனர். அப்போது பேருந்து நிறுத்தம் அருகே வாய்க்கால் கரையில் உள்ள பனை மரத்திலிருந்து திடீ ரென ஒரு மட்டை பெயர்ந்து கீழே விழுந்த போது பனை மரத்தில் கூடு கட்டித் தங்கியிருந்த விஷ வண்டுகள் அதிவேகத்தில் கூட்ட மாக பறந்து அவர்களை தாக்கி யதில் மயங்கி கீழே விழுந்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த 108 ஆம்பு லன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தட்சிணாமூர்த்தி மற்றும் ஆறுமுகம் ஆகிய இரு வரும் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைப் பல்க லைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். தகவலறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சீர்காழி தீயணைப்பு அலுவலர் ரமேஷ் தலைமையிலான படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பனை மரத்தில் இருந்த விஷ வண்டு களை கூண்டோடு அழித்தனர்.
காந்தி 150-வது ஆண்டு நிகழ்ச்சி
நாகப்பட்டினம், நவ.13- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் - கலைஞர்கள் சங்கம், கீழ்வே ளூர் கிளையின் சார்பில், தேவூர் கடைத்தெருவில் மகாத்மா காந்தி- 150-வது ஆண்டு நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்குக் கிளைத் தலைவர் கவிஞர் எல்.பி.சாமி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் நா.சத்தியசீலன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.மாரி முத்து முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் எஸ்.மோகன் இங்கர்சால் வரவேற்றார். அரசு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் து.இள வரசன், தமுஎகச மாவட்டச் செய லாளர் ப.பாலசுந்தரம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் ப.சுபாஷ் சந்திரபோஸ் ஆகி யோர் கருத்துரையாற்றினர். வீரா.செந்தில் நன்றி கூறினார்.
தஞ்சாவூர் : குறைதீர் கூட்டங்கள்
தஞ்சாவூர், நவ.13- தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவ.14 (வியா ழக்கிழமை) காலை 10.30 மணியளவிலும், மாற்றுத் திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவ.15 (வெள் ளிக்கிழமை) காலை 10.30 மணியளவிலும் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவ லகத்தில், வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசா யிகள், மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை தொடர் பான மனுக்களை அளித்து பயன்பெறுமாறு தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை
தஞ்சை ஆட்சியர் தகவல்
கும்பகோணம், நவ.13- யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடின்றி விவ சாயிகளுக்கு கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தஞ்சை மாவட்ட ஆட் சியர் அண்ணாதுரை கும்பகோணத்தில் தெரிவித்தார். கும்பகோணம் அருகே உள்ள இன்னம்பூர் கிரா மத்தில் பொது மக்கள் நேர்காணல் முகாம் மற்றும் மானிய விலையில் டிராக்டர் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கும்ப கோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் முதி யோர் உதவித்தொகை, குடும்ப நிவாரண உத வித்தொகை மற்றும் குடிமனைப்பட்டா உள்ளிட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவி களை வழங்கினர். மேலும் பொதுமக்கள் அளித்த மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் அண்ணாதுரை கூறுகையில், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக சம்பா பயிரிடப்பட்டுள்ளதாக டெல்டா மாவட்டங்களில் 134 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் தலா 5 டன் உரம் கையிருப்பு வைக்கப்பட்டு நிர்வகிக் கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் கையி ருப்பு குறைவாக உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு விவரம் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவதா கவும் தெரிவித்தார். ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு மூட்டை யூரியா உரம் மட்டுமே வழங்கப்படுவதாக விவசாயிகள் புகார் கூறுவது தொடர்பாக கேட்ட தற்கு, இதுகுறித்து தகவல் வரவில்லை என்றும் சம்பந்தப்பட்ட சங்கத்திற்கு அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். நிகழ்ச்சியில் கும்பகோணம் வட்டாட்சியர் பால சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கு ழலி மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.