tamilnadu

img

விழிப்புணர்வுக் கூட்டம்

அறந்தாங்கி, ஜூன் 28- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி ஆணையர் வினோத் அறிவுரைப்படி குடியிருப்புகளில் குப்பைகளை பிரித்து வழங்குவது தொடர்பாக சுகாதார அலுவலர் முத்துகணேஷ் சுகாதார ஆய்வாளர் சேகர் தலைமையில் வார்டு-4 பகுதியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.  இதில் மக்கும், மக்காத குப்பைகளை தனித் தனியாக பிரித்தும், நாப்கின், பேம்பஸ் போன்றவைகளை மடித்து தனியாக ஒப்படைக்கவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், டெங்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

;