தஞ்சாவூர், ஜூன் 12- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் 38 ஆவது கிளை மாநாடு, கிளைத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடை பெற்றது. நீலாயதாட்சி வரவேற்றார். கிளைச் செயலா ளர் க.சம்பத் ஆண்டறிக்கை வாசித்தார். கோட்டச்சங்க துணைப் பொருளாளர் இரா.விஜயகுமார் தொடக்க வுரையாற்றினார். இரா.விஜயகுமார், க.சம்பத், வி.எஸ். பாலகிருஷ்ணன், நீலாயதாட்சி ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். பணி ஓய்வு பெறும் தோழர் சி.திருஞானத்தையும், புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும், கோட்டச்சங்க பொதுச்செயலாளர் சே. செல்வராஜ் நிறைவுரையாற்றினார். நிறைவாக பி. ராஜேந்திரன் நன்றி கூறினார். கூட்டத்தில், “எல்ஐசி பாலிசி மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். தமிழகத்தில் மத்திய, மாநில அரசுப் பணி களில் 100 சதவீதம் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.