tamilnadu

img

வீட்டு வரி உயர்வை உடனே திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, அக்.16- ரேசன் கடைகளில் அனைவருக்கும் 15 விதமான அத்தியாவசிய பொருட் களை தங்கு தடையின்றி வழங்க வேண்டும். வீட்டு வரி மற்றும் குப்பை வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும். வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். 60 வயதான அனை த்து முதியவர்களுக்கும் பென்சன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துவாக்குடி கிளைகள் சார்பில் செவ்வாய் அன்று துவாக்குடிமலை கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் தங்கவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிபிஎம் ஒன்றிய செயலாளர் நடராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் மல்லிகா, ஒன்றிய செயலாளர் மாரியம்மாள் ஆகியோர் பேசினர். கார்மேகம், அமீர், சசிகுமார், செபாஸ்டின், சாத்தையா, ரபீக். சுசிகலா, அமுதா, ராஜலெட்சுமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.