tamilnadu

img

சிஐடியு கரூர் மாநாட்டில் ரூ.2 லட்சம் நிதியளிப்பு

கரூர், ஜூலை 1- சிஐடியு சங்க கரூர் மாவட்ட 8-வது மாநாடு கரூரில் நடைபெற் றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் எம்.ஜோதிபாசு வரவேற்று பேசினார். மாவட்ட துணைத்தலைவர் கா.கந்த சாமி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சிஐடியு சங்க மாநிலச் செயலாளர் கே.தங்கமோகன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநில துணைத்தலைவர் எஸ்.ஆறுமுகம் மாநாட்டை நிறைவு செய்து பேசி னார்.  மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு பேசினார். மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் பொருளாளர் கே.மதி யழகன் ஆகியோர் அறிக்கை முன் வைத்து பேசினர். விதொச சங்க மாவட்டச் செயலாளர் இரா.முத்துச் செல்வன் மாநாட்டை வாழ்த்தி பேசினர். மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

பழிவாங்கும் நடவடிக்கை

மாநாட்டில், அரசு போக்கு வரத்து கழக கோவை கோட்டத் திற்கு உட்பட்ட கரூர் பணிமனை யில் பேருந்து ஓட்டுநர் குணசேக ரன் தொழிலாளர்களின் கோரிக்கை களை வலியுறுத்தி, கரூர் கிளை முன்பு பேசியதற்காக கரூரிலிருந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளைக்கு பணியிட மாறுதல் செய்து பழி வாங்கும் வகையில் அரசு போக்கு வரத்து கழக கரூர் கிளை மேலாளர் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து தொழிலாளர் விரோத போக்குடன் செயல்படும் கிளை மேலாளரை மாநாடு கண்டிக்கிறது. தொழிலா ளர் விரோத போக்கை உடனடியாக கைவிட வேண்டும், மீண்டும் குண சேகரனை கரூர் கிளையில் பணி யமர்த்த வேண்டும் இக்கோரிக்கை யை நிறைவேற்றாவிட்டால் தொழி லாளர்களை திரட்டி தொடர் போராட் டம் நடத்தப்படும். தொழிலாளர் நலவாரியத்தின் பணப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு ஜூலை மாதம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய மாவட்டத் தலைவராக ஜி.ஜீவானந்தம், செயலாளராக சி. முருகேசன், பொருளாளராக கே. மதியழகன், துணைத் தலைவர் களாக கா.கந்தசாமி, எஸ்.சாம்ப சிவம், அ.காதர்பாட்ஷா, பாலசுப்பிர மணியன், தனபால், ரத்தினமாலா, மாவட்ட துணைச் செயலாளர்களாக கிருஷ்ணமூர்த்தி, ராஜா முகமது, அரவிந்த், சாந்தி, ஹோச்சுமின், தண்டபாணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  புகளூரில் செயல்பட்டு வரும் காகித ஆலையில் பணியாற்றி வந்த தோழர் ராஜசேகரன் சமீபத்தில் உயிரிழந்தார். அவர், சிஐடியு சங் கம், கட்சி பணிகளில் அயராது தன்னை இணைத்துக் கொண்டு கட்சி, சிஐடியு வளர்ச்சிக்கு கரூர் ஒன்றியம், வேலாயுதம்பாளையம், நொய்யல் ஆகிய பகுதிகளில் மிக வும் உறுதியாக இருந்தார். காவேரி கலைக்குழுவில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட் டார். அவரது நினைவாக அவரது குடும்பத்தினர் சிஐடியு  அகில இந் திய மாநாட்டிற்கு கரூர் மாநாட்டில் நேரடியாக வந்து சிஐடியு சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம், மாநிலச் செயலாளர் கே.தங்கமோகனன் ஆகியோரிடம் ரூ.50 ஆயிரத்தை வழங்கினர். மேலும் மாநாட்டில் சிஐடியு சங்க அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.2 லட்சம் முதற்கட்டமாக வழங் கப்பட்டது.