tamilnadu

img

சிஐடியு அகில இந்திய மாநாட்டிற்கு நிதியளிப்பு

கரூர், ஜூலை 5 - கரூர் மாவட்டம், புகளூர் காகித ஆலையில் பணியாற்றும் அரவிந்த் - இந்துமதி  தம்பதியினரின் புதுமனை புகுவிழா தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிஐடியு கரூர் மாவட்டத் தலைவர் ஜி. ஜீவானந்தம், அரவிந்த்-இந்துமதி குடும்பத்தினர் சார்பாக வழங்கப்பட்ட சிஐடியு அகில இந்திய மாநாட்டு நிதி ரூ.10 ஆயிரத்தை பெற்றுக் கொண்டார். புகளூர் காகித ஆலையில் பணியாற்றும் ஈஸ்வரன்-மீரா தம்பதியரின் மகன்  தினேஷ்-ஹரிதாலெட்சுமி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருச்சி ரயில்வே சொசைட்டி திருமண மண்டபத்தில் ஜூலை 29-ம் தேதி நடைபெற்றது.  இதில், திருமண விழாவில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், கரூர் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, சிஐடியு கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் ஆகியோரிடம் சிஐடியு அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.10 ஆயிரத்தை மணமகன் குடும்பத்தினர் வழங்கினர்.

;