திருச்சிராப்பள்ளி,ஜூன்.17- கொரோனாவால் இறந்த மின் ஊழியர்க ளின் குடும்பத்திற்கு பிரதமர் காப்பீடு திட்டத் தில் வழங்குவது போல ரூ 50 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைக ளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் தமிழ்நாடு மின் துறை பொறியாளர் அமைப்பு திருச்சி பெரு நகர் வட்ட கிளை சார்பில் செவ்வாய் அன்று தென்னூரில் உள்ள திருச்சி மண்டல மின் வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு வட்டச் செயலாளர் இருதயராஜ், கோட்ட செயலாளர் நடராஜன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சிவராமன் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தொழிற்சங்கத்தினர் ஏராள மானோர் கலந்து கொண்டனர். இதே போன்று மன்னார்புரம் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் கோட்ட மின்வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு பெருநகர் திட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி திட்டதுணைத்தலைவர் என்.பன்னீர்செல்வம், சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசி னர். இதில் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். லால்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கோட்ட செயலாளர் பழனியாண்டி தலைமை வகித்தார். இதில் செல்வம், ஜீவா, இருதயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். துறையூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு கோட்ட தலைவர் செல்வம் தலைமை வகித்தார். இதில் கோட்ட செயலாளர் ரவிச் சந்திரன், நமநாதன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பு அறிவித்ததை தொடர்ந்து பெரம்பலூர் நான்குரோடு அருகிலுள்ள மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநில செயலாளர், எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். வட்ட செயலாளர், ஆ.பன்னீர்செல் வம் கோட்ட செயற்குழு உறுப்பினர்கள். செந்தில், சதீஷ் , தர்மராஜ் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் நகரியம், நீலகிரி மற்றும் எம்.ஆர்.டி அலுவலகம் பட்டுக்கோட்டை செயற் பொறியாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் எஸ்.ராஜாராமன், வட்டத் தலை வர் அதிதூத மைக்கேல்ராஜ், வட்டச் செய லாளர் பி.காணிக்கை ராஜ், வட்டப் பொரு ளாளர் எம்.ஆரோக்கியசாமி, மாவட்ட நிர்வா கிகள் சங்கர், ரவி, மணிவண்ணன் உட்பட ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.