திருச்சிராப்பள்ளி, ஆக.20- திருச்சி விமான நிலையத்திற்குள் பயணி கள் ஆட்டோவை தடை செய்ய விமான நிலைய நிர்வாகத்தை கண்டித்தும். விமான நிலையத்திற்குள் பயணிகள் ஆட்டோவை அனுமதிக்க வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுனர் சிஐடியு சங்கம் சார்பில் செவ்வாய் அன்று ஏர்ப்போர்ட் அரு கில் ஒயர்லெஸ் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ ஊழியர் சங்க பொன்மலை பகுதி செயலாளர் ராஜ லிங்கம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், ஆட்டோ சங்க மாவட்ட தலை வர் சந்திரன், பொதுச்செயலாளர் மணி கண்டன் ஆகியோர் பேசினர். ஆட்டோ சங்க மாநில துணை செயலாளர் பக்ருதீன்பாபு, அமைப்பு செயலாளர் சரவணன், மாவட்ட துணைத்தலைவர் அழகப்பன், கிரேசி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர். மாவட்ட பொருளாளர் அன்புசெல்வம் நன்றி கூறினார்.