tamilnadu

img

சாலைப் பணிகளை உடனே தொடங்க சிபிஎம் வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜூன் 19- தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே சாலைப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து, சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “பூதலூர் வட்டம், மனையேறிப்பட்டி - வெண்டையம்பட்டி- இராயமுண்டான் பட்டி, சுரக்குடிப்பட்டி சாலையை சீர் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டி பல போராட்டங்கள் நடத்தியது.  இதன் பிறகு சாலைகள் போடுவதற்கு டெண்டர் விடப்பட்டது. வெண்டையம்பட்டி- இராயமுண்டான்பட்டி (என்.ஹெச்) சாலையில், இதுவரை எந்த வேலையும் தொடங்கவில்லை. மேற்கண்ட சாலைகளில், சில பகுதிக ளில் பணிகள் முடிந்தும், தொடர்ந்து வேலையும் நடைபெற்று வருகிறது. வெண்டையம்பட்டி சாலை மிக மோசமான படுகுழி களாக இருப்பதால் விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன் சாலை  பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும். இராயமுண்டான் பட்டி காளியம்மன் கோவிலில் இருந்து, இராயமுண்டான்பட்டி முதல் சொரக்குடிப்பட்டி (ஒன்றியச் சாலை) இணைப்பு சாலையில் உடனடியாக வேலை தொடங்க வேண்டும் ஒரு சில நாட்களில் வேலை தொடங்காவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.