tamilnadu

img

மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்கக் கோரி சிபிஎம் மனு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 5- மார்க்சிஸ்ட் கட்சியின் அபிஷேகபுரம் பகுதிக்குழு சார்பில் இடைக்கமிட்டி செயலாளர் வேலுசாமி, கிளைச் செயலாளர்கள் லெனின், கணேசன், ரவி ஆகியோர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரிடம் அளித்த மனுவில், திருச்சி- மதுரை ரோடு எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் நெடுஞ்சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் பணி கடந்த 5 மாதமாக நடைபெறாமலும், முழுமையாக முடிக்கப்படாமலும் உள்ளது.   இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வியாபாரிகள், குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோர் விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

;