திருச்சிராப்பள்ளி, ஜூலை 10- திருச்சி அரசு மருத்துவமனையில் பாரத் மேன்பவர் ஏஜென்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி ரூ. 380 வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தீர்மானித்த கூலியை கொடுக்காத அரசு மருத்துவமனை முதல்வர் மீது சட்டப்படியான நடவடி க்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த தொழி லாளர் சதீஷை வேலையை விட்டு நீக்கி பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு அவருக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் புதனன்று மருத்துவமனை வளாகத்தில் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மாறன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவனை ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கார்த்திக், மாவட்டத் தலைவர் மோகன், ஆட்டோ ரிக்சா ஓட்டுநர் சங்க பொதுச் செயலாளர் மணிகண்டன், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், கிளைச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.