திருச்சிராப்பள்ளி, நவ.7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவெறும்பூர் தாலுகாக் குழு உறுப்பின ராகவும், சிஐடியு கட்டுமான சங்க அகில இந்திய நிர்வாகி யாகவும், துவாக்குடி நக ராட்சி வார்டு கவுன்சிலராக 5 ஆண்டு மக்கள் பணிபுரிந்த வருமான தோழர் கே.பி. என்கிற கே.தங்கவேல். இவர் உடல் நலக்குறைவால் புத னன்று இரவு காலமானார். அன்னாரது உடல், கட்சி யினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக துவாக்குடி மலை சந்திரன் காலனியி லுள்ள அவரது இல்லத்தில் வியாழன வைக்கப் பட்டிருந்தது. பின்னர் அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத் திற்கு தாலுகா செயலாளர் நட ராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், கட்டுமான சங்க மாநில செயலாளர் குமார், சிபிஎம் புறநகர் மாவட்ட செய லாளர் ஜெயசீலன். மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், அமமுக துவாக்குடி நகர அவைத்தலைவர் ஆனந்தன், ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், மல்லிகா, வெற்றிச்செல்வன், லெனின், சிஐடியு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், பூமாலை, சம்பத், அருணன் மற்றும் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள், கிளை செயலா ளர்கள், டிஒய்எப்ஐ, மாதர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் அண்ணாரது உடல் தகனம் செய்யப்பட்டது.