சோழவரத்தை அடுத்த நல்லூர் ஊராட்சி, ஆட்டந்தாங்கல் பகுதியில் வசித்து வரும் பி.நடேசன் ஆவடி அருகில் உள்ள மேல்பாக்கத்தில் அமைந்திருக்கும் அரசினர் ஏழைகள் பராமரிப்பு இல்ல துறையில் கடந்த 36 ஆண்டுகள் பணியாற்றி ஜூன் 30 அன்று பணி ஓய்வு பெற்றார். இந்த பணி நிறைவு பாராட்டு விழா அலுவலக வளாகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் அரசு மறுவாழ்வு இல்ல நிர்வாக அலுவலர் ஆர்.பூபாலன் (செங்கல்பட்டு), சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பி.டில்லிபாபு, திமுக வழக்கறிஞர் பிரிவு மாநில முன்னாள் தலைவர் வீரமுத்து, சங்க நிர்வாகிகள் எஸ். கோபால், கே.செல்வராஜ், டி.பன்னீர்செல்வம், கே.விஜயன், ஏ.ஜி.சந்தானம், வசந்திநடேசன், ஜி.வி.எல்லையன், கே.நடராஜன், தினேஷ், தையல் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் சுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.