tamilnadu

திருச்சி  துப்பாக்கி தொழிற்சாலை மூடல்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 23- திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பாதுகாப்பு படை கலன் தொழிற்சாலைகளான துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் ஹெச் ஏபிபி தொழிற்சாலைகள் கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக திங்கள்கிழமை முதல் வரும் 31-ஆம் தேதி வரை தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய பணிகளை வீட்டிலிருந்து மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும் கம்பெனிக்கு தொழிற்சாலைக்கு அத்தியாவசிய தேவைகளான குடிநீர், மருத்துவம், மின்சாரம் உள்ளிட்ட பணிகளை பார்க்கும் தொழிலாளர்கள் மட்டுமே வந்து செல்வதற்கு  அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

;