tamilnadu

img

ரத்த தான முகாம்

திருச்சிராப்பள்ளி, செப்.17- இந்திய ஜனநாயக வாலிபர் சங்க இரத்ததான கழகம், திருச்சி அரசு மருத்துவமனை இரத்த வங்கியோடு இணைந்து திருச்சி முக்கொம்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு டிஒய்எப்ஐ ஒன்றிய செயலா ளர் அஜீத்குமார் தலைமை தாங்கினார், பாரதிதாசன் வர வேற்றார். நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரவிக் குமார், ஜீயபுரம் காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம், அரசு மருத்துவ வங்கி மருத்துவர் புவனேஸ்வரி ஆகியோர் முகாமை துவக்கி வைத்து இரத்ததான கொடையா ளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர். இதில் டிஒய்எப்ஐ மாநகர் மாவட்ட செயலாளர் லெனின், மாநிலக் குழு உறுப்பினர் வினோதினி ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். சிபிஎம் ஒன்றிய செயலாளர் வினோத் மணி, கரும்பாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.