tamilnadu

img

100 நாள் வேலை கேட்டு போராடிய விவசாயத் தொழிலாளர்கள்

திருநெல்வேலி, ஜூன் 27- மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டப்படி 100 நாட் கள் வேலை வழங்க கோரி பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் இயக்கம் நடை பெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் சார்பி ல் 27ம் தேதி பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.வி.தொ.ச ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் இயக்கத்திற்கு தலைமை தாங்கினார் வி.தொ.ச மாவட்ட செயலாளர் பாலுச்சாமி கோரிக்கை களை விளக்கி பேசினார்,இயக்கத்தில்  சி.பி.எம் ஒன்றிய செயலாளர் கே.மாரிச் செல்வம், முன்னாள் ஒன்றிய செயலா ளர் தி. சந்திரசேகர், குருஸ் முடியப்பன், வி.ராமசாமி உச்சி மாளி, பொன்னுசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;