தஞ்சை ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தஞ்சாவூர், ஜூன் 5- நுண் கடன் நிதி நிறுவனங்க ளின் அடாவடியை தடுத்து நிறுத்தக் கோரி மாதர் சங்கம் சார்பில் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சிய ரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி, பொருளாளர் இ.வசந்தி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எம்.அறிவுராணி, வன ரோஜா உள்ளிட்டோர் அளித்த மனு வில், “கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையில்லாமல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சூழலில், தஞ்சை மாவட்டத்தில், நுண்கடன் நிதி நிறுவனங்கள் அடாவடியாக வசூல் செய்கிறார்கள். கூடுதலாக வட்டியும் வசூல் செய்வதோடு, கடன் கட்ட இய லாதவர்களை கடுஞ் சொற்களை பயன்படுத்தி, ஏளனமாகப் பேசி, பெண்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டு கிறார்கள். மேலும் திருவிடைமருதூர் பகுதியில் நுண்கடன் நிதி நிறு வனம் தொடர்ச்சியாக தொந்தரவு செய்ததில் மன உளைச்சலுக்கு ஆளாகி இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் கள். மாவட்டம் முழுவதும் நுண் கடன் நிதி நிறுவனங்களின் அடாவடித் தனத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கூறப்பட்டுள்ளது.