tamilnadu

img

7 பேர் விடுதலைக் கோரி ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 20-கடந்த 27 ஆண்டு காலமாக சிறையில் வாடும் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம் சார்பில் ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக வாலிபர்சங்க திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் திருச்சி தலைமைதபால் நிலையத்தில் இருந்து ஆளுநருக்கு அஞ்சல் அட்டைஅனுப்பும் போராட்டம் திங்களன்று நடைபெற்றது.போராட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் லெனின் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சுரேஷ்,மாநிலக்குழு உறுப்பினர் வினோதினி, மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர் இரட்டைமலை, விக்கி, அஜீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆளுநருக்கு 500 அஞ்சல் அட்டைகளை அனுப்பினர்.

;