tamilnadu

மூவருக்கு வெட்டு

நத்தம், ஜூன் 8- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சரளைப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னதுரை (56). அதே ஊரைச் சேர்ந்த வர் கண்ணபிரான் (26). இவர்கள் இரு வருக்கும் இடப்பிரச்சனை சம்மந்தமாக முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படு கிறது. இந்த நிலையில் கண்ணபிரான் தனது தோட்டத்திற்கு வேலி அமைத்துள் ளார். அப்போது இது சம்மந்தமாக சின்ன துரைக்கும், கண்ணபிரானுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலை யில் கோபமடைந்த கண்ணபிரான் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சின்னதுரை, அவரது மகள்கள் வசந்தி, அம்சவள்ளி ஆகியோரை வெட்டி யுள்ளார். படுகாயமடைந்த மூன்றும் செந் துறை அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச் சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து நத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்ணபிரானை கைது செய்தனர்.