தருமபுரி, அக்.5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாவட்ட செயலாளருமான தோழர் எஸ்.பி.சின்ன ராசு,(56) வெள்ளியன்று காலமானார். இவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாநிலக் குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், பி.டில்லிபாபு, மாவட்ட செயலாளர் ஏ.குமார், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில செயலாளர் சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.விஸ்வநாதன், காசி, தமிழ்குமரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் பொ.மு.நந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.இளம் பரிதி, எம்.மாரிமுத்து, எம்.முத்து, எம்.ஆறுமுகம் , கே.என். மல்லையன், சி.நாகராசன், எஸ்.கிரைஸாமேரி, சோ.அருச்சுணன், வே.விசுவநாதன் மற்றும் இடைகமிட்டி செயலாளர்கள், மாவட்ட குழு, பகுதிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத் தினர். இவரது உடல் சனியன்று அவரது சொந்த ஊரான அரூர் வட்டம் சங்கிலிவாடி கிராமத்தில் அடக்கம் செய் யப்பட்டது. பின்னர் இரங்கல்கூட்டம் நடைபெற்றது.