tamilnadu

காவிரி உபரி நீரை ஏரிகளில் நிரப்ப வலியுறுத்தி 200 ஊராட்சிகளில் மக்கள் சந்திப்பு - சிபிஎம்

தருமபுரி, நவ.15- காவிரி உபரி நீரை ஏரிகளில் நிரப்ப வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி மாவட்டம் முழுவதும்  200  ஊராட்சிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் மற்றும்  ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஏ.குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது, தருமபுரி மாவட்டம் விவசாயத்தை அடிப்ப டையாகக் கொண்ட மாவட்டமா கும். 70 சதவிகிதம் பேர் விவசா யத்தை சார்ந்துள்ளனர்.

நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிகளுக்குக் கீழே சென்றுவிட்டது. பெரும்பா லும் வானம் பார்த்த பூமியைக் கொண்டுள்ள இம்மாவட்டத்தில் தொடர் வறட்சி காரணமாகவும், விவசாய விளை பொருட்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக் காததாலும் சிறு, குறு விவசாயி கள் நிலத்தை தரிசாகப் போட்டு  விட்டு அண்டை மாநிலங்களுக் குக் குடிபெயர்வது தொடர்கிறது.

இந்நிலையை மாற்றிட காவிரி, தென்பெண்ணை ஆறு களில் மழைக் காலங்களில் ஓடும் உபரி நீரைக் கால்வாய்கள் மூலம் ஏரிகளில் நிரப்பினால்  நிலத்தடி நீர்மட்டம் உயரும், குடிநீர்ப் பிரச் சினை தீரும், வேளாண்மை செழிக் கும். இத்திட்டத்தைச் செயல்ப டுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  2018 ஆம் ஆண்டு மாவட்டம் முழுவதும் ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணம், மாபெரும்  மக்கள் கோரிக்கை மாநாடு  நடத்தப்பட்டது.

இதைத்தொ டர்ந்து தமிழக முதலமைச்சரும் இத்திட்டத்தை நிறைவேற்றுவ தாக வாக்குறுதி அளித்துள்ளார்.  எனவே, உடனடியாக இத்திட் டத்திற்கு நிதி ஒதுக்கி, பணிக ளைத் தொடங்க வேண்டும் என  வலியுறுத்தியும், மக்கள் கோரிக் கைகளை முன்வைத்தும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2020 நவம்பர் 16 முதல் 21 முடிய  மாவட்டம் முழுவதும் 100 ஊராட் சிகளில் மக்கள் சந்திப்பு நடத்தி  ஊராட்சி மன்றத் தலைவர்கள் மூலம் தமிழக அரசுக்கு மனு அளிக்கும் போராட்டம் நடைபெற உள்ளது.

இப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தர வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

கொரோனா தடுப்பு

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா பரவவல் குறைந்து வருவது போன்று தோற்றமளித்தாலும், இரண்டாவது அலை நோய்த்தொற்று தீவிரமடையும் அபாயத்தையும் மறுப்பதற்கில்லை.

எனவே தருமபுரி மாவட்டத்தில் கொரோனா நோய் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்த கண்காணிப்பு அதிகாரி நீரஜ்மிட்டல் குறிப்பிட்டதைப் போல் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்து வமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் தனி யார் கல்லூரிகளில் மேலும் 10 ஆயிரம் படுக்கை வசதிகளை கூடுத லாக தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.