tamilnadu

img

மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீர் ஏற்ற பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி, பிப். 10- காரிமங்கலம் அருகே குட்டூர் கிராமத்தில், ஓராண்டாக குடிநீர் ஏற்றப்படாமல் இருக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி யால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி, குட்டூர் கிரா மத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில், கடந்த 2011ஆம் ஆண்டு ஊராட்சி நிதியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. இதன் மூலம் ஒகேனக் கல் குடிநீர் எற்றப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக, மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் காட்சி பொருளாகவே உள்ளது. இதனால், அப்பகுதி பொதுமக் கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.  இந்த மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் ஏற்ற பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். எனவே, தொட்டிக்கு குடிநீர் ஏற்றி, விநியோ கம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.