தருமபுரி, ஜூன் 19- கந்துவட்டி கொடுமையில் இருந்து மீட்க வேண்டும் என நவலை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்-சிவகாமி தம்பதியினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்குட்பட்ட நவலை கிரா மத்தைச் சேர்ந்த சிவக்குமார்-சிவகாமி தம்பதியினர். இவர்க ளுக்கு இரண்டு மகன்கள் உள்ள னர். இவர்கள் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வரு கின்றனர். சிவக்குமார், அதே பகுதியைச் சேர்ந்த சத்துணவு அமைப்பாளர் ஜோதி என்ப வரிடம் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கி யுள்ளார். இதற்கு வட்டியாக மாதம் ரூ.600 ஜோதிக்கு கொடுத்து வரு கிறார். தொடர்ந்து வட்டி கொடுத்து வரும் சூழலில் ஜோதி சிவக் குமாரிடம் வாங்கிய பணம் கூட்டு வட்டியாகி விட்டது. எனவே ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் எனக் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதற்கு சிவக்குமார் நான் வாங் கிய ரூ.20 ஆயிரம் மட்டுமே தரு வேன் எதற்கு ஒரு லட்சம் ரூபாய் தரவேண்டும் என கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ஜோதி தனது உறவினர்களுடன் சென்று சிவக்குமாரையும், இவரது மனைவி சிவகாமியையும் தரக்குறைவாக வும் ஆபாசவார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர். மேலும் சிவ காமியை சாலையிலேயே ஆடை களை கிழித்து அடித்துள்ளனர். காய மடைந்த சிவகாமி அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜூன் 15 ஆம் தேதி யன்று கம்பைநல்லூர் காவல்நிலை யத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக மேற்படி கந்துவட்டி கும்பல் பணம் கொடுக்கவில்லை என் றால் குடுமபத்துடன் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி வருகின்றனர். எனவே எங்களைக் கந்துவட்டி கும்பலிடமிருந்து மீட்கவேண்டும் எங்களின் ஊயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சிவக்குமார்-சிவகாமி தம்பதியினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர்.