tamilnadu

அரசு உயர்நிலைப் பள்ளியில் நாணய அங்காடி திறப்பு

 தருமபுரி, டிச. 22- தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஏரிமலை கிராமம். இப்பகுதியில் பழங்குடியினரும், மிகவும் பிற்ப டுத்தப்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 87 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 7 ஆசிரியர் கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளி  வளாகத்தில் ஆசிரியர்கள் பங்களிப்புடன் ரூ.3,500 மதிப்பி லான பென்சில், பேனா,நோட்,கணித உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் நாணய அங்காடி திறக்கப்பட் டுள்ளது. இந்த அங்காடியில் விற்பனையாளர்  இருக்க மாட்டார். இங்கு மாணவர்களுக்கு தேவைப்படும் பொருட்களின் விலை பட்டியலின்படி  பணத்தை செலுத்திவிட்டு பொருட் களை எடுத்துக் கொள்ளலாம். இதனால் அதிக விலை கொடுத்து வாங்கப்படுவது குறைகிறது. மேலும், உரிய விலைக்கு வாங்கும் சூழல் உருவாக்குகிறது. இந்த செயல் பாடு மாணவர்களுக்கு ஒழுக்கம், நாணயம் மற்றும் நேர் மையை கற்றுக் கொடுக்கிறது  என ஆசிரியர்கள் தெரி வித்தனர். முன்னதாக, இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் டி.இராமலிங்கம் தலைமை வகித்தார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.