tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதந்திர குறைதீர் கூட்டத்தை நடத்துக

தருமபுரி, அக்.16- மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறைத்தீர்க்கும் நாள்  கூட்டத்தை நடத்தக்கோரி தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் சார்பில்  அரூர் கோட்டாட்சியர் அலுவ லகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் புதனன்று நடை பெற்றது.  மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நடத் தப்பட பேண்டும். இக்கூட் டத்தில் மருத்துவர்கள் மூலம் பரி சோதனை செய்து  மாற்றுத்திற னாளிகளுக்கு அடையாள சான்று, ரயில் பாஸ், பேருந்து உதவியாளர் பாஸ் ஆகியவற்றை வழங்கவேண்டும். ஊரக வேலை  உறுதித்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசாணைப் படி 4 மணிநேரம் வேலைக்கு முழு  ஊதியம் அனைத்து ஊராட்சி களிலும் கிடைக்க உத்திர வாதப்படுத்த வேண்டும். வீடு இல்லா மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வீடுவழங்கும் திட்டத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின்  சார்பில் அரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் புதனன்று நடை பெற்றது.  இப்போராட்டத்திற்கு சங்கத் தின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.கரூரான் தலைமை வகித்தார்.மாநிலப் பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, மாநிலச் செயலாளர் ஜீவா, மாவட்ட துணைத்தலைவர் ஜி.தமிழ்செல்வி, வட்டத்தலைவர்  ஜி.செந்தில்குமார், வட்டச்செய லாளர் சி.வேடியப்பன், பொரு ளாளர் ஆர்.சங்கர், வட்ட இணைச் செயலாளர் தமீஷ்அகமது  உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, ஆர்.சிசுபாலன், ஒன்றியச்செயலாளர் ஆர்.மல்லிகா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதையடுத்து அரூர் சார்  ஆட்சியர் மு.பிரதாப், காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்ட சங்க  தலைவர்களுடன்  பேச்சுவார்த்தை  நடத்தினார். அப்போது அனைத்து  கோரிக்கைகள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப் படும்  என உறுதியளித்தார். இதனையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.