tamilnadu

img

கொல்கத்தாவில் அரசு மருத்துவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து மருத்துவர்கள் தர்ணா

தருமபுரி, ஜூன் 14- கொல்கத்தாவில் அரசு மருத் துவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் மருத்துவர்கள் கருப்புபேட்ஜ் அணிந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்காள மாநிலம், கொல் கத்தாவில் அரசு மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த செவ்வாயன்று முதல் மருத்துவர்கள் மற்றும் மருத் துவ மாணவர்கள் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் வியாழனன்று மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி  கொல்கத்தாவில் அரசு மருத்துவ மனைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர் மற்றும் மருத் துவ மாணவர்களுடன் பேசினார். அப்போது போராட்டத்தில் ஈடு பட்ட மருத்துவர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவு களைச் சந்திக்க நேரிடும் என முதல மைச்சர் மம்தா பானர்ஜி எச்சரித்து விட்டு திரும்பினார்.  இதையடுத்து, 4வது நாளான வெள்ளியன்று மம்தா பானர்ஜி யின் பேச்சை கண்டித்தும், மருத் துவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், நாடு முழுவதும் மருத்துவர்கள் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவ சேவைகள்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன்ஒருபகுதியாக தருமபுரி அரசு மருத்துவமனை முன்பு வெள்ளியன்று இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் மருத்துவர்கள் கருப்புபேட்ஜ் அணிந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்க தலை வர்கள் மருத்துவர்கள் கோகுல் சந்திரசேகர், வெங்கடேசன் உள் ளிட்ட ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் மருத்து வர்கள் மற்றும் மருத்துவச்சேவை  சார்ந்த பணியாளர்களுக்கு எதி ரான வன்முறை தாக்குதலை தடுக்கும் வகையில் மத்திய அரசு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

சேலம்

சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தா மற்றும் தமிழகம் பண்ருட்டி அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் மீது நடைபெற்ற கொலை வெறி தாக்குதல்களைக் கண்டித்து,  அரசு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக் கங்கள் எழுப்பினர்.